Kalutara Home and Family Foundation
ஏற்பாடு செய்துள்ள 17ஆவது வருட மீலாத் விழா எதிர்வரும் 12ஆம் திகதி (சனிக்கிழமை) மாலை 4.30 மணி முதல் களுத்துறை கே.எம்.சி.சி. கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
திறமை படைத்த 60 மாணவர்களின் பங்குபற்றலுடன் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இஸ்லாமிய பாடல்கள், கஸீதா, துஆ பிரார்த்தனை, ஹதீஸ் போன்றனவும் குழு நிகழ்வுகளும் விசேட சொற்பொழிவுகளும் நடைபெறவுள்ளன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர், கௌரவ அதிதியாக களுத்துறை மாவட்ட அஹதிய்யா சம்மேளனத் தலைவரும் சமாதான நீதிவானுமான எம்.எச்.எம்.உவைன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.