1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சட்டவிரோதமான முறையில்

டீசல் விற்பனை செய்தமை மற்றும் பாதுகாப்பற்ற  வகையில் சேமிப்பில் வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம்  விமானப்படை புலனாய்வு அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தம்புள்ளை அதிகாரிகள் மொரகொட, மீகஸ்வெவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொண்டனர்.

இந்தச் சுற்றிவளைப்பின்போது 1,225 லீற்றர் டீசல் மற்றும் உபகரணங்களும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கலென்பிந்துனுவெவ பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி