சிட்னியில் இருந்து கொழும்பு
நோக்கி பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தின் விமானி அறையை பூட்டிய சம்பவத்துடன் தொடர்புடைய விமானி பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துணை விமானி கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது விமானி அறையைத் திறக்கவில்லை. >இந்தச் சம்பவம் விமானப் பயணத்துக்கு இடையூறு விளைவிக்கவில்லை என்றாலும், பயணிகள் மற்றும் பணியாளர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது
சம்பவத்தை அடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விசாரணையை ஆரம்பித்ததுடன் விமானி மற்றும் துணை விமானி இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் .