2025 பெப்ரவரியில் கொண்டு
வரப்படும் வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று (19) தங்காலையில் இடம்பெற்ற முதலாவது பொதுத் தேர்தல் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"தைரியமுள்ளவர்களால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்பதை நாங்கள் நிரூபித்துள்ளோம். ஆரம்பத்தில், பொருளாதார ஸ்திரத்தன்மையை எதிர்கொள்வதே எங்களின் பலமான சவாலாக இருந்தது.
மிகக் குறுகிய காலத்தில், ஜனநாயக அமைப்புகளுடன், சாதகமான ஒப்பந்தங்களைச் செய்து, நம்பகமான பொருளாதாரத்தை உருவாக்கினோம் என்றார்.