கொரோன வைரஸ் காரணமாக இன்று (17) அரச காரியாலயங்களுக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதேச காரியாலயங்கள் அரசாங்க அதிபர் காரியாலயங்கள் திறந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
அரசாங்கதிற்கு மக்களின் உயிரை விட தேர்தல் முக்கியமாக உள்ளது என்று அனுரகுமார திசாநாயக தெரிவித்துள்ளார்.
இதே வேளை தேர்தலை பிற்போட்டு பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டி தற்போது நாட்டில் உள்ள பிரச்சினை பற்றிபேசி உரிய தீர்வை எடுக்க வேண்டும் என சமகி ஜன பலவேகய கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (16) தெரிவித்திருந்தார்.
தேர்தலை பிற்போட வேண்டாம் - நாமல் ராஜபக்ச
எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட வேண்டாம் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐ.தே.க பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கின்ற இச்சந்தர்ப்பத்தில் அவர்கள் தேர்தலை பிற்போட்டு அவர்களின் தோல்வியை மறைக்க பார்க்கின்றார்கள் எனவே எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போட வேண்டாம் என நாமல் ராஜ்பக்ச தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருப்பினும் இவர்களுக்கு மக்களின் உயிரை விட தேர்தலே முக்கியமானது என்று அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.