ஆசியாவில் இருக்கும் நாடுகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ள உலக சுகாதார தாபனம் நிலைமை மோசமாக உள்ளதாகவும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது என்றும் வைரசின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளயும் விரைவாக எடுப்போம் என்று உலக சுகாதார தாபனம் தெரிவித்துள்ளது.
வைரஸ் சமூக மட்டத்தில் ஊடுருவியுல்லதாக அறியக்கிடைக்கின்றது இந்த COVID 19 வைரசை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து ஆசிய நாடுகளை விட்டு மட்டுமல்ல உலகத்தை விட்டே அளிக்கவேண்டும் என்று உலக சுகாதார தாபனம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஆசியாவில் இதுவரையில் 11 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கையின் நடவடிக்கை
இலங்கையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது அதில் முதல் கட்டமாக மார்ச் 18 புதன்கிழமை நாட்டுக்குள் வரும் அனைத்து விமானங்களையும் 2 வாரங்களுக்கு தற்காளிகமாக முடக்கியுள்ளனர்.
அதற்கு அடுத்ததாக வெளிநாட்டில் இருந்து வந்த இலங்கையர்களை வைரசை பரிசோதிக்கும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
உலக நாடுகளில் 156 நாடுகளுக்கு வைரஸ் பரவியுள்ளது உலகில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 201634 எனவும் உயிரிழப்பு 8007 எனவும் உலக சுகாதார தாபனம் அறிவித்துள்ளது.
இதே வேளை தேர்தலை பிற்போடுவதற்கு முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள உற்பட பல கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.