கொரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் பிக் மெச்சை நிறுத்த முடியாமல் போன ஜனாதிபதியின் அதிகாரம் எப்படிப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல கிரிக்கட் விளையாட்டு வீரரும் முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க.
ரோயல் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியை நிறுத்துவதற்காக ஜனாதிபதி அதிகாரத்தை பயன்படுத்தியிருக்கலாம் என இலங்கைக்கு கிரிக்கட் மூலமாக உலகக்கோப்பையை பெற்று தந்த அர்ஜுன ரணதுங்க கூறியுள்ளார்.
மார்ச் 17 ம் திகதி ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து வெளிட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த கிழமை நடந்த கொழும்பு ராஜகிரிய தோமஸ் கிரிக்கட் சுற்றுப்போட்டிக்கு அவருக்கு தெரியாமல் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளன்ர்.
ராஜகிரிய தோமஸ் கிரிக்கட் சுற்றுப்போட்டி நடக்காமல் நிறுத்துவதற்கு கல்வி அமைச்சர் இருக்கின்றார் ஜனாதிபதி இருக்கின்றார் பிரதமர் இருக்கின்றார் இவ்வாறு அர்ஜுன ரணதுங்க கடந்த மார்ச் 18 ம் திகதி சிறிகொத்தாவில் நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கிரிக்கட் சுற்றுப்போட்டியை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் பலரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பின்னர் கிடைத்த செய்திகளின் படி கிரிக்கட்சுற்றுப்போட்டியை பார்க்கவந்த ஒருவருக்கு கொரோனா (COVID 19) இருப்பதாக அறியக்கிடைக்கின்றது இதனை முன்பே தடுத்திருக்க முடியும் என்று அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.