சிறிலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவரது பத்தரமுல்லயில் உள்ள வீட்டில் தன்னை தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.
அண்மைக்காலங்களில் அவர் பெருமளவிலான மக்களுடன் இணைந்து செயற்பட்டதாகவும் அதனால் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் தனது வீட்டுக்கு தன்னைச் சந்திக்க வருபவர்களை முற்றாக தவிர்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.