கொரோன வைரஸ் (COVID 19) தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையர் ஜயந்த ரணசிங்க அவருக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி கூறும் பொழுது,
மார்ச் 09 பின்னேரம் எனக்கு கொரோன தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அன்று 11,12 மணியளவில் என்னை மேல் மாடிக்கு அழைத்து சென்றார்கள் எனக்கு கடுமையான மரனபயம் வந்தது தூக்கு கைதியை அழைத்துச் செல்வது போன்ற உணர்வு ஏற்பட்டது வைத்திய சாலையின் நிருவாகக் குழு பயப்படவேண்டாம் என்று ஆறுதல் கூறினார்கள் இவ்வாறு ஜயந்த ரணசிங்க தெறிவித்துள்ளார்.
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வந்த அவர் மார்ச் 22 ம் திகதி மீண்டும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் இப்போதும் அவரால் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியாது இன்னும் 21 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என வைதியர்கள் கூறியுள்ளதாக ஜயந்த ரணசிங்க கூறியுள்ளார்.
ஜயந்த ரணசிங்கவின் குடும்பம் 04 பேரைக் கொண்டது அவரது மனைவி உற்பட 02 மகன்களும் உள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் நாம் மனிதர்களை மனிதர்கள் போல் நடத்த வேண்டும் அதற்கு கொரோனாவை காரணம் காட்ட முடியாது.