பல விதமான சமூகங்களின் பிறப்புரிமைகள் வித்தியாசமானவை சில மதப்பிரிவுகளின் படி மரணம் மீள் பிறப்பு என்பதை சில சமூகங்கள் நம்பி வருகின்றன சில மதச்சம்பிரதாயங்களின் படி இறந்த ஒருவரின் உடலுக்கு இறுதிக்கிரியைகள் செய்வதில்லை.
அது அவர்களில் சமயம் சம்பந்தப்பட்டது இன்னும் சிலர் மதம் சார்ந்து செயற்படுவதில்லை இதைக்கருத்திற் கொண்டால் ஒவ்வொரு சமூகமும் வித்தியாசமானவை.
மனித வரலாறு நெடுகிலும் ஏற்பட்ட கஷ்டமான நேரங்களில் இவ்வாறான கதையாடல்கள் பதிவாகியுள்ளன.
மரணங்கள் நிகழும்போது இறுதிச்சடங்குகள் இடம்பெறுவது மனித வரலாற்றில் நடந்து வந்திருக்கின்றது.இந்நாட்டில் முஸ்லிம் சமூகம் மட்டுமல்ல பல சமூகங்கள் வாழ்கின்றன இறுதிச்சடங்குகள் பாதுகாப்பாக நடைபெற்று வந்திருக்கின்றது.
இன்று நாம் முகம் கொடுத்திருப்பது covid -19 வைரஸுக்கு பல்லாயிரம் பேர் இறந்துள்ளனர் அவர்களை அடக்கம் செய்வது சம்பந்தமாக உலக சுகாதார தாபனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.