நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் கடுமையாக உள்ளன கொரோனா வைரசை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காமல் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்வதில் முன்னின்றது தேர்தலுக்கு நாட்களை எண்ணிக்கொண்டு இருந்ததால் இப்போது கொரோனா தொற்றியுள்ளது.
மக்கள் இப்போது வாழ்வதற்கு கடும் சிரமப்படுவதாக சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கையில் அரசாங்கம் ஊரடங்கு சட்டம் பிறப்பித்துள்ளதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன இதனால் மக்கள் பெரும் பொருளாதாரச்சுமைக்கு உட்பட்டுள்ளார்கள்.
அரசாங்கம் தேர்தலைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தததே தவிர கொரோனா வைரஸைக்கட்டுப்படுத்துவதற்கு சரியான நேரத்தில் உறுதியான முடிவை எடுக்கத்தவறிவிட்டதாக சமூக ஊடக ஆர்வலர்கள் விமர்சனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான சட்டத்தரணி தினேஷ் தொடங்கொட தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.