எந்தக்கட்சியாக இருந்தாலும் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமோ இனமாக இருந்தாலும் எங்களுக்கு பொதுவான எதிரி கொரோனா வைரசாகும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.
முழு இலங்கையர்களும் இந்த நேரத்தில் பொதுஎதிரியை தோற்கடிக்க ஒன்று திரளுமாறு அழைப்பு விடுத்துள்ளார் கொரோனா வைரசினால் இறந்த இரண்டாவது நபர் பற்றி சமூக ஊடகங்களில் பரப்படும் செய்தி பற்றி அவரிடம் theleader.lk கேட்டபோது,
இந்த நேரத்தில் முடிவெடுப்பது சுகாதார அதிகாரிகளின் கையில் உள்ளது சுகாதார சேவைகள் உலகளவில் மிகப்பாரிய அளவில் பறந்து காணப்படும் ஒரு அமைப்பாகும்.
கொரோனா வைரசிற்கு எதிராக உலகம் முழுவதும் அனைத்து சுகாதார நிலையங்களிலும் நடவடிக்கை எடுப்பது சுகாதார அதிகாரிகளாகும் இதனைக் கருத்திற்கொண்டு அவர்களின் முடிவை பிரதானப்படுத்தி இருதிக்கிரியைகள் சம்பந்தமாக அவர்கள் வெளியிடும் தகவல்களைக் கேட்டு நடப்பது சிறந்ததாகும் அதனால் நாம் வாதம் செய்து கொண்டிருப்பது ஆரோக்கியமான விடயமல்ல என இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.