கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் மரணமடைந்த மூன்றாவது நபரான மருதானைப்பகுதியைச் சேர்ந்த முஹம்மது ஜனூசின் சடலம் இன்று 02 முல்லேரிய பகுதியிலுள்ள கொடிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தந்தையின் ஜனாஸா எரியூட்டப்படுவதற்காக எடுத்துச்செல்லப்பட்டதாக அவரது மகன் பயாஸ் தெரிவித்துள்ளார்.