ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் தேசிய அரசாங்கம் அமைப்பது பற்றி பேசியுள்ளதாக தகவலொன்று அறியக்கிடைக்கின்றது.
நாட்டின் தற்போதய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு அரசாங்கத்துடன் ஐ.தே.க பேசியுள்ளதாகவும் கொரோனா வைரஸ் அவசரகால நிலைமைகளின் போது எவ்வாறு செயற்படுவது என்பது பற்றியும் மக்களின் அன்றாட வாழ்வை எப்படி முன்னெடுத்து செல்வது என்பது பற்றியும் பேசப்பட்டதாக ஐ.தே.க தெரிவித்துள்ளது.
ஆனால் அரசாங்கத்துடன் தேசிய அரசாங்கம் ஒன்று அமைப்பது பற்றி எந்த இடத்திலும் பேசப்படவில்லை என ஐ.தே.க சுட்டிக்காட்டியுள்ளது.