நாடு முகம் கொடுத்திருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப் படுத்துவதற்கு சுகாதார,வைத்திய,பாதுகாப்பு பிரிவுகள் மற்றறும் விசேட பிரிவினருடன் ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Covid 19 கொரோன வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்ற முடிவுகளை எடுக்கும் விசேடக் கூட்டம் நேற்றறு 4 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
அரச வைத்திய சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய கொரோன வைரசை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட கொரோன வைரஸ் தாக்கத்தை ஜனாதிபதி தொடக்கத்திலேயே கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்தார்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று 4 நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த கருத்துகள்.
இப்படியான நிலைமைகளில் வைரஸ் சம்பந்தமா விசேட வகுப்புகளை நடாத்த தான் ஆலோசனை முன்வைத்த போதும் இது சம்பந்தமாக இன்னும் சரியான விடை கிடைக்கவில்லை
அரசாங்கத்தின் முதல் தீர்மானம் வைரஸ் சம்ந்தமான நாட்டில் இருக்கும் விசேட நிபுணத்துவம் வாய்ந்த 5 பேர் மற்றும் உலக சுகாதார தாபனத்தில் பயிற்சி பெற்ற இருவரையும் சேர்த்து விசேட குழுவொன்றை நியமித்து இந்த வைரசை அழிப்பது சம்பந்தமாக இறுதி முடிவை எடுக்க வேண்டும் என சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார்.