கொரோனா வைரசினால் இந்த நாடு கடுமையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது சமகி ஜனபல வேகய கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களை வாழ வைப்பத்தற்கு வேலைத்திட்டங்கள் இல்லையா என அவர் ஜனாதிபதியிடம் கேட்டுள்ளார் அவரது இந்த வேண்டுகோள் சமூக ஊடகங்களிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பிரியமானவர்களே இப்போது நாட்டிலுள்ள சிக்கலான நிலைமையில் எங்களுக்கு தேவை தேர்தல் அல்ல மாறாக மக்களை வாழவைப்பதற்கான வழிமுறைகளைச் செய்ய வேண்டும் என்பதாகும்
இன்று வரைக்கும் கொரோனா வைரசால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பல உள்ளன அனைத்திற்கும் அரசாங்கங்கள் முதலில் மக்கள் வாழ்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று அவரது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் .