கொரோனா வைரசால் இறக்கும் அனைவரினதும் உடல்கள் தகனம் செய்யப்படும் எனவும் சுகாதார சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நடைபெறும் எனவும் சிரேஷ்ட சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில் திங்கட் கிழமை இறந்து போன தெஹிவளை பாமன் கடை பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சந்தேகம் ஏற் பட்டது பின்னர் அவரது உடலை பரிசோதித்தபோ து அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
அவரது உடல் 7ம் திகதி இரவு தகனம் செய்யப்பட்டதாக theleader.lk அறியக்கிடைக்கின்றது.
மரணித்தவரின் குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிய வருகின்றது.