COVID 19 வைரஸ் தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் IDH வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்பு உலர் உணவுப்பொருட்களை புத்தாண்டுப்பரிசாக வழங்கியுள்ளது.
இந்த நிகழ்வு சுகாதார மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராய்ச்சி தலைமையில் நேற்று(10) இடம்பெற்றுள்ளது.
இந்த நன்கொடைகளை இலங்கை முஸ்லிம் சிவில் அமைப்பு வழங்கியுள்ளது.
IDH மருத்துவமனைக்கு 570 உலர் உணவுப்பொதிகளையும் முல்லேரிய மருத்துவமனைக்கு 650 பொதிகளையும் வழங்குமாறு அமைச்சர் பவித்ரா தேவி வன்னியராய்ச்சி சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கை சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இரு மருத்துவமனைகளுக்கும் சென்று பரிசுப்பொருட்களை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளனர்.