COVID 19 வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சாதகமான பங்களிப்பை வழங்கிய வெகுஜன போக்குவரத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது ஆனால் அடிமட்டத்திலிருந்து இது பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றது என கரு ஜெயசூர்ய குறிப்பிட்டுள்ளார்.
முன்னால் சபாநாயகர் கரு ஜெயசூரிய கூறுகையில் யதார்த்தங்களுடன் இணங்கத்தவறினால் பொதுச்சுகாதார நெருக்கடி மற்றும் பொருளாதாரச்சரிவுக்கு வழிவகுக்கும் என முன்னால் சபாநாகர் ஜெயசூரிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளார்.
மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சுகாதார சேவைகளும் பாதுகாப்புத்துறையும் மதிப்புள்ள சேவைகளை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக்கடிதம் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவினால் பொதுசுகாதார வல்லுனர்கள் தொழில் வல்லுனர்கள் ஆகியோரின் பரிந்துரைகளுடன் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் மற்றும் தீங்கைக் குறைக்கும் நோக்கத்துடன் எழுதப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.