முழு சமுதாயமும் செய்த தியாகத்தை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் நாடு சிக்கித் தவிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் தேர்தல் நடாத்துவது பற்றி கலந்தாலோசித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தின் செயற்பாட்டு காலம் முடிவடைந்துவிட்டது.
அரசாங்கம் மார்ச் 2ம் திகதி பாராளுமன்றத்தை கலைத்தது மக்கள் நலனுக்காக அல்ல மாறாக எதிர்க்கட்சியின் பிளவுகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிப்பதற்காகும். இதில் மக்களுக்கு எதுவித நன்மையும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.