கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு விடும் என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட், டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
கில்பெர்ட்டின் குழு உலகளவில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், தனது குழு உருவாக்கும் தடுப்பூசி "80 சதவிகிதம்" பயனுள்ளதாக இருக்கும் என்றும், செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி தயாராகி விடும் என்றும் அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டுபிடிக்க 12 முதல் 18 மாதங்கள் ஆகும் என்று விஞ்ஞானிகள் முன்பு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.