நேற்று 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று 14 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
நேற்றுடன் தொற்றிலிருந்து 61 பேர் பூரணமாக குனமாகி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
வைரஸால் இதுவரை 7 மரணங்கள் பதிவாகியுள்ளன.
மருத்துவ மேற்பார்வையின் கீழ் மொத்தமாக 165 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், கடைசி 14 தொற்றாளர்கலும் நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்களில் ஒருவர் புத்தளத்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அவர்களில் எட்டுப் பேர் பாலாலி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு பேர் முலாங்கோவில் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் தேர்தல் அறிவிப்பு:
கொரோனா வைரஸ் புள்ளிவிவரங்களின் அதிகரிப்பு:
சில அரசாங்க உறுப்பினர்கள் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
இதற்கு பதிலளித்த பிவித்துரு ஹெல உருமய தலைவர் உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றியபோது, தேர்தல் நடத்துதல் அல்லது ஒத்திவைத்தல் குறித்து அரசாங்கம் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று கூறினார்.
ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரைத் தொடர்பு கொண்டபோது, கொரோனா வைரஸ் தொற்றுநோய் முழுமையாக முடிவுக்கு வராததால் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த ஜனாதிபதிக்கு விருப்பமில்லை என்று theleader.lk கூறினார்.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்களால் ஜனாதிபதிக்கு கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.
எல்லே தேரர் இதைப் பற்றி என்ன கூறுகிறார்?
கொரோனா வைரஸ் முழுமையாக கட்டுப்படுத்தப்படாதபோது தேர்தலை நடத்த அவசரப்படக்கூடாது என்று தேரர் கூறுகிறார்.
கொரோனா வைரஸை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியை அனுமதிக்க வேண்டும், அதே நேரத்தில் ஆயுதப்படைகளும் சுகாதார சேவைகளும் கொரோனா வைரஸை முறையாகக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன .
வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது உறுதி செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேரர் மேலும் கூறினார்.
ஜனாதிபதி தயங்குகிறார்!
அரசாங்கத்தில் சிலரிடமிருந்து சில அழுத்தங்கள் இருந்தபோதிலும், பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தியுள்ளார் என்று அரசாங்கத்தின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜூன் 2 ஆம் திகக்கு முன்னர் தேர்தலை நடத்தினால் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் சடலத்தின் மேல் நின்றுதான் ஆட்சி நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய குற்றச்சாட்டுகள், அதே போல் பல மாதங்கள் தேர்தல் தாமதமாகிவிட்டால் அவர் ஒரு சர்வாதிகாரியாக ஆகிவிடுவார் என்று அதே எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதி சமீபத்தில் தனது பல ஆலோசகர்களுடன் இந்த விஷயத்தைப் பற்றி விவாதித்ததாகவும், ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல் திணைக்களத்தின் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளதாகவும் தெரிய வருகின்றது.