இந்தியாவின் ஜம்மு காஷ்மீர்
மாநிலத்தின் பாரமுல்லா பகுதியில் இன்று (20) காலை இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி, ரிக்டர் அளவுகோலில் 4.9 மற்றும் 4.8 என்ற அளவில் இரண்டு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை அதிகாரிகள் கண்காணித்து வருவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது