குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில்
தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தப்பிச் செல்ல முயன்ற நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவுக்கு உதவினார் எனக் கூறப்படும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொது முறைப்பாடுகள் பிரிவின் பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க என்பவர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் சஞ்சய் அபேசிங்க பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று (20) ஆஜர்படுத்தப்பட்டார்.
சந்தேக நபரான சஞ்சய் அபேசிங்க சுமார் 11 மாதங்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையிலேயே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.