ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனையடுத்து ஜனாதிபதி ரணிலுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் ஹரீஸ் எம்பியை தொடர்பு கொண்டு இந்தச் செய்தியை உறுதிப்படுத்த பல முறைகள் நாம் முயற்சித்தும் அவர் பதிலளிக்கவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானங்களை மீறியமைக்காக ஹரீஸ் எம்பி கட்சியின் உயர்பீடத்திலிருந்தும் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக கட்சியினால் நீக்கப்பட்டமை தெரிந்ததே.