பந்துலலால் பண்டாரிகொட
இன்று (21) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக இவர் பாராளுமன்ற உறுப்பினரானார்.
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டபபூர்வமானது என கடந்த 9 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எவ்வாறாயினும் ஹரின் பெர்னாண்டோவினால் காலியான தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்க கட்சி இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது