பாகிஸ்தான் யாத்ரீகர்களை
ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று ஈரானில் விபத்துக்குள்ளானதில் 28 பயணிகள் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
மத்திய ஈரானின் Yazd மாகாணத்தில் நேற்று (20) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸின் பிரேக் செயற்படாமை காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.