ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணாதாச கொடித்துவக்கு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தார்.
நாட்டின் எதிர்காலம் மற்றும் பொருளாதாரத்தின் நலன் கருதி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (21) பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார்.
தனது உரையை முடித்துக் கொண்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்தியில் கொடித்துவக்கு தனது இருக்கையில் அமர்ந்தார்.
2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் கொடித்துவக்கு 114,319 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவானார்.