அரசியல்வாதிகளுக்கு மதுபான
உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை வன்மையாக மறுப்பதாக கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே. குணசிறி தெரிவித்தார்.
இதுவரை எந்தவொரு அரசியல்வாதியும் மதுபான உரிமம் வழங்குமாறு கோரவில்லை எனவும் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை விலைக்கு வாங்குவதற்கு அரசாங்கம் மதுபான உரிமம் வழங்குவதாக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
"எங்கள் சட்டபூர்வமாக கட்டாயப்படுத்தப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் மதுபான உரிமங்களை வழங்குகிறோம். முழு வெளிப்படைத்தன்மையுடன் உரிமம் வழங்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பாக எங்களில் யாரும் மதுபான உரிமம் வழங்க முடியாது. இதனை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.