நாட்டில் அனைவரும் அச்சமோ
சந்தேகமோ இன்றி வாழ்வதற்கு ஏற்ற சூழல் தேவைப்படுவதால் முஸ்லிம் சமூகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் அலி சப்ரி, இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் 60 சத வீத முஸ்லிம்கள் ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களிப்பர் என தெரிவித்தார்.