(நூருல் ஹுதா உமர்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
தலைவரான ரவூப் ஹக்கீம் எம்பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கு எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று (21) இருவரும் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமகால அரசியல் நிலைமைகள் சம்பந்தமாக கலந்துரையாடினர்.
இதன்போது கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், சமகாலத்தில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் ஹரீஸ் எம்பி சஜித் பிரேமதாசவிடம் விளக்கினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்.