1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில்  சிறுநீரக நோயானது

பாரியளவில் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு தொடர்பில் தாம் பலத்த சவாலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதியவர்களில் 45 வீதத்துக்கும் அதிக எண்ணிக்கையானோருக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளதாகவும், முதியவர்களில் 24 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த ஆரம்ப சுகாதார சேவைகள் தொடர்பில் அரசாங்கம் எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்தும் என ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

அதற்காக அரசாங்கம் அதிக பணத்தை செலவிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி