(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ்
பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி - பாலைநகர் பகுதியில் யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
இவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
யுவதியின் சடலம் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.