ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டா என அதன் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம்பெற்ற தனது கன்னி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கப் போவதில்லை என நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.
தன்னால் முடிந்ததை மட்டுமே அறிவிப்பதாகவும், செய்ய முடியாததை அறிவிப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் இணைக்காது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
பௌத்த நாட்டில் அனைத்து மதங்களையும் மொழிகளையும், மக்களையும் பாதுகாப்பதாக உறுதியளிப்பதாக நாமல் ராஜபக்க்ஷ வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், சவால்களுக்கு தாம் அஞ்சப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.