ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
விசேட உயர் பீடக் கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸலாத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் ஜனாதிபதி தேர்தல் பிரசார பணிகள் தொடர்பிலும் ஆராயப்படும் எனவும் தெரிவித்தார்.