ஜனாதிபதித் தேர்தலில்
போட்டியிடும் பிரதான வேட்பாளர்களின் கொள்கைகள் குறித்து விவாதத்தில் கலந்து கொள்ள தான் தயார் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் திரு நாமல் ராஜபக்க்ஷ, பெஃப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்
ஒரு வளர்ந்த ஜனநாயக சமூகத்தில் இருக்க வேண்டிய இத்தகைய விவாதத்தை நடத்துவதற்கான உங்கள் முற்போக்கான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன். இது இலங்கை மக்கள் வேட்பாளர்களையும் அவர்களின் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க உதவும்.
பகுத்தறிவு மற்றும் கருத்து அடிப்படையிலான விவாதம் இருக்கும் என்று நம்புகிறேன்.
விவாதத்தின் நேரம்,திகதி, இடம் மற்றும் வடிவம் குறித்து விரைவில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.