இரத்தினபுரி மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரள தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று அறிவித்துள்ளார்.
இதன்படி பாராளுமன்றத்தில் உறுப்பினர் ஒருவருக்கான வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உடனடியாக எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இதேவேளை, இது தொடர்பில் கருணாரத்ன பரணவிதாரன தமிழ் லீடருக்கு தெரிவிக்கையில், தலதா அத்துக்கோரள தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் நாடாளுமன்றச் செயலாளருக்கு இன்று (23) அனுப்பியுள்ளார்.
இதன்படி விருப்பு வாக்கில் தலதா அத்துக்கோரளவுக்கு அடுத்தபடியாக உள்ள நான் அந்த வெற்றிடத்துக்கு நியமிக்கப்படவுள்ளேன்.
அடுத்த மாதம் 3 ஆம் திகதி இரத்தினபுரி மாவட்ட எம்பியாக நான் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளேன் என்றார்.