97 வயதான லீலாவதி அஸ்லின்
தர்மரத்ன என்பவர் தனது முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
இவர் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற களனிப் பல்கலைக்கழகத்தின் 143ஆவது பட்டமளிப்பு விழாவில் பௌத்த கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1927 இல் பிறந்த இவர் மில்லவ பாலிகா பெண்கள் கல்லூரியில் படித்தார்.
லீலாவதி அஸ்லின் தர்மரத்ன 1946 ஆம் ஆண்டு பொதுப் பரீட்சையை ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிமூலங்களில் எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அதன் பின்னர் ஆங்கில ஆசிரியராக நியமனம் பெற்று 1955 இல் ருக்கஹவில பாடசாலை ஒன்றில் ஆங்கில மொழி ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஆனால், தான் ஒரு நொத்தாரிசு ஆக வேண்டும் என்ற ஆசையால் ஆசிரியர் பணியை இராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் 1952 ஆம் ஆண்டு நொத்தாரிசு பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தார்.
2023 ஆம் ஆண்டில், 94 வயதான லீலாவதி, வித்யோதயா பல்கலைக்கழகத்தில் முதுகலை டிப்ளோமாவைப் பெறுவார்.