உள்ளூராட்சி சபைத் தேர்தல்
தொடர்பான விசேட கலந்துரையாடல் இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான நிதி ஆணைக்குழுவிடம் இல்லை என அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தலுக்கான அடிப்படை செலவுகளை தவிர, மீதமுள்ள பணம் அனைத்தும் திறைசேரிக்கு மீள செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சில வேட்பாளர்கள் தற்போது நாட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என்றும் அவர் கூறுகிறார்.
மேலும் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன்படி, உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் இந்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.