1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

(பாறுக் ஷிஹான்)

அநுரகுமார திசாநாயக்கவை
பற்றி கூறத் தேவையில்லை.மோசமான ஒருவர். இறுதிப் போரில் ஒன்றரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டி இராணுவத்துக்கு கொடுத்த  ஒரு கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச் சக்தியாக அவர் உள்ளார்.
 
அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கை பிரிப்பதற்காக  வழக்குத் தாக்கல் செய்து பிரித்தவர்கள இவர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின்   செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  நேற்று (24)  அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டுப் பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
 
மேலும் தனது அவர் தெரிவிக்கையில்,
 
75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகிறார்கள். குறிப்பாக பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறாக   கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
 
அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு.சிங்கள நாடு. இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அது மட்டுமன்றி வடகிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர். சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறுதான் உள்ளது.
 
சஜித் பிரேமதாச புத்தசாசன அமைச்சராக இருந்த போது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது. 
 
இது  அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது. இது தவிர அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விஹாரை கூட கட்டப்பட்டிருந்தது என்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி