குருணாகல் போகமுவ
பிரதேசத்தின் தெதுரு ஓயாவில் நீராடிய தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாயுடன் நீராடிய 9 வயதான பிள்ளையின் சடலம் நேற்று (25) மீட்கப்பட்ட நிலையிலேயே
காணாமல் போன தாய் மற்றும் 2 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் இன்று (26) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்