தனிப்பட்ட தகராறு காரணமாக
ஒருவர் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.
மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவநம்பியதிஸ்ஸ மாவத்தை பகுதியில் நேற்று (25) இரவு இக்கொலை இடம்பெற்றுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் வெலிமடை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.