2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வது தொடர்பான அறிவிப்பு இன்று (26) எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வாக்குப் பதிவுக்கான வைப்புத் தொகையை ஏற்கும் நடவடிக்கை இன்று (26) முதல் செப்டம்பர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்படும்