1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உயர் நீதிமன்றத் தீர்ப்பினால்

அமைச்சு பதவிகளை இழந்த ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அண்மையில் ஜனாதிபதியின் ஆலோசகர்களாக  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இருவரும் தேர்தல் நோக்கத்துக்காக தங்களின் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்துகிறார்களா என்பது குறித்து கண்காணித்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க 
தெரிவித்துள்ளார் . 

தாம் வேட்பாளராக இருந்தாலும் நியமனங்களை வழங்குவதற்கு அரசியலமைப்பு அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என ஜனாதிபதி கூறுகின்றார் . 

ஆனால், மேற்கூறிய முன்னாள் அமைச்சர்கள், வாகனங்கள் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி, வேட்பாளரை விளம்பரப்படுத்தினால் , அது தேர்தல் சட்டத்தை மீறும் செயலாகும் என தேர்தல் ஆணையாளர் கூறுகிறார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி