ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்
தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது.
அதன் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் இறுதிப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக முன்னணியின் ஊடகப் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி இயக்கத்தை பலப்படுத்தி அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.