ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான சுஜீவ சேனசிங்க தெரிவிக்கையில் இது தொடர்பான கொள்கைப் பிரகடனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் ஒரே நாட்டில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு என்ற கொள்கை அமுல்படுத்தப்படும் என கட்சியின. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“வடகிழக்கு பிராந்தியங்களை அபிவிருத்தி செய்வதற்கும், வடகிழக்கை அபிவிருத்தி செய்வதற்கும் சர்வதேச ஆதரவு மாநாட்டை நிச்சயமாக நடத்துவோம் என்றார்.