1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடாளுமன்ற தேர்தலில் அகில

இலங்கை மக்கள் காங்கிரஸ் திருகோணமலை மாவட்டத்தில் தனித்து போட்டியிட வேண்டுமென அந்தக் கட்சியின் திருமலை மாவட்ட முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அப்துல்லாஹ் மஃரூப் தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தமிழ் லீடருக்கு மேலும் தெரிவிக்கையில் 
            
நாங்கள் ஜனாதிபதித்  தேர்தலில்  சஜித்தை ஆதரிப்பது என்ற தீர்மானத்துக்கு வர எமது கட்சியின் தலைவருக்கு ஏற்படுத்தப்பட்ட நிர்ப்பந்தம் அல்லது அழுத்தம் காரணமாக இருக்கலாம். 
 
எது எப்படி இருப்பினும் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசார மேடைகளில் நான் ஏறப்போவதில்லை. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளேன். 
 
எது எப்படி இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சி பிற மாவட்டங்களில் எவருடன் இணைந்து போட்டியிட்டாலும்  பரவாயில்லை. ஆனால் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்தே போட்டியிட வேண்டுமென்றார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி