இரட்டைக் குடியுரிமை பெற்றமை
உள்ளிட்ட 3 வழக்குகள் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்ட நிலையில், டயானா கமகேவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
அதன் பின்னர், குற்றம் சுமத்தப்பட்டுள்ள டயானா கமகேவின் கைரேகைகளை பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.