ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்
ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனம் நாளை மறுதினம் 29ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இது தொடர்பான வைபவம் இடம்பெறவுள்ளது.
'இயலும் இலங்கை” என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தக் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்து பொருளாதார சுபீட்சத்துக்கு இட்டுச் செல்வதற்கான அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் படிப்படியாக நாட்டை அபிவிருத்தியடைந்த நிலைக்கு கொண்டு செல்லும் திட்டங்களும் “இயலும் இலங்கை” கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன
வரலாற்றில் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கை படிப்படியாக மீண்டு வந்ததன் பின்னர் மற்றுமொரு அடியை முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்