போதைப்பொருள் வர்த்தகரான
ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் இவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் வெள்ளவத்தையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது விசேட அதிரடிப்படை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு இவர் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவின்றனர்.